close
Choose your channels

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரல் வீடியோ

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதும் இந்த சீரியலின் நாயகி ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி என்பவர் திடீரென இந்த சீரியல் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் இந்த கேரக்டரில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது வினுஷ நடித்த காட்சி நேற்று முதல் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக ரோஷினிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அதனால்தான் அவரை சீரியல் இருந்து விலகுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரோஷினி முதல்முறையாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை என்றும், என்னுடைய இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்றும், உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது என்றும், எதிர்காலத்திலும் இதே போன்ற ஆதரவு எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ரோஷினியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.