close
Choose your channels

'சிங்கம் 4' படம் குறித்து ஏமாற்றமான செய்தி சொன்ன ஹரி.. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

Saturday, April 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ’சிங்கம்’ படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியாகி மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ’சிங்கம்’ படத்தில் நான்காம் பாகம் உருவாக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் இயக்குனர் ஹரியிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது குறித்து ஏற்கனவே அவர் பலமுறை பேட்டி அளித்துள்ளார். ’சிங்கம்’ நான்காம் பாகம் உருவாகுமா என்று எனக்கே தெரியாது, அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் தற்போது நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’சிங்கம்’ படத்தின் நான்காம் பாகம் என்பது அந்த படங்களின் தொடர்ச்சியான கதை கிடைத்தால் மட்டுமே செய்வேன், டைட்டிலை மட்டும் பயன்படுத்திக் கொண்டு வேறு கதையை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று இயக்குனர் ஹரி தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட்டில் மூன்று பந்தில் மூன்று விக்கெட் எடுத்தால் ஹாட்ரிக் என்று சொல்வார்கள், ஆனால் நான்காவது விக்கெட் எடுத்தால் அதற்கு பெயர் இல்லை, அதேபோல் நான்காம் பாகம் உருவாக்குவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு போலீஸ் படம் உருவாக்க திட்டமிட்டு உள்ளேன் என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று ட்விஸ்ட் கொடுத்தார். எனவே ’சிங்கம் 4’ படம் குறித்த ஏமாற்றமான தகவல்களை இயக்குனர் ஹரி தெரிவித்தாலும் மீண்டும் ஒரு விறுவிறுப்பான போலீஸ் படம் கொடுப்பேன் என்று ஹரி கூறியிருப்பதால் அந்த படம் என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.