close
Choose your channels

அவர் இயக்குனர் அல்ல, பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்: தமிழ் நடிகை ஆவேசம்

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஒருவரை அவர் இயக்குனர் அல்ல, பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர் என தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ’நெஞ்சிருக்கும் வரை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். அதன்பிறகு அவர் ’உன்னை போல் ஒருவன்’ ’பயணம்’ ’வெடி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் ’பீம்லா நாயக்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னால் நடந்தது. இந்த விழாவில் பவன்கல்யாண் பேச்சால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பவன் கல்யாணின் மிகச்சிறந்த பேச்சுகளில் ஒன்று என்றும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள நடிகை பூனம் கவுர், ‘நடப்பதெல்லாம் ஒன்றுமே தெரியாததுபோல் புன்னகைத்தபடி தவறான வேலைகளை செய்யும் ஒரு இயக்குனர். இன்னொருவர் தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்திக் கொள்பவர். அரசியல் ரீதியாக இழிவுபடுத்துவது இவர்களுக்கு கை வந்த கலை. இந்த இரண்டு இயக்குனர்களுமே பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்கள்’ என்று கூறியுள்ளார்.

பூனம் கவுர் விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் ராம்கோபால்வர்மா என்பது தெரிந்தாலும் இன்னொரு இயக்குனர் யார் என நெட்டிசன்களுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.