நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை: விஷால் குறிப்பிடும் ஜனநாயக கேலிக்கூத்து

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்க கூறப்பட்ட காரணம், அவரை முன்மொழிந்த இருவர் தாங்கள் விஷாலின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று கூறியதுதான் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் அதிகாரி முன் அவரை முன்மொழிந்த நபர் கூறிய வாக்குமூலத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த நபர், 'நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை' என்று கூறியுள்ளார். தேர்தல் அதிகாரி முன் 'நான் கையெழுத்தே போடவில்லை அது போலியான கையெழுத்து என்று தான் அந்த நபர் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் அந்த நபர் நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை' என்று கூறுவது காமெடியின் உச்சகட்டமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து விஷால் மேலும் கூறியபோது, 'ஜனநாயகத்தின் கேலிக்கு மற்றொரு உதாரணம் இங்கே !!! என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' சென்சார் தகவல்கள்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கும்

கனடா நாட்டின் ஆபாச நடிகை மர்ம மரணம். தற்கொலையா?

கனடாவை சேர்ந்த ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 23

25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவர்

25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன? விஷால் அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டியின் டைரி;

கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது பொதுமக்கள் பலர் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக பலமணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.