close
Choose your channels

பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டியின் டைரி;

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது பொதுமக்கள் பலர் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக பலமணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. 

சேகர் ரெட்டிக்கு அப்போதைய முதல்வரும் இப்போதைய துணை முதல்வருமான ஓபிஎஸ் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. ஆனால் இதை ஓபிஎஸ் மறுத்தார்.


இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலான ‘டைம்ஸ் நவ்’ சேனல் சேகர் ரெட்டியின் டைரியை இன்று வெளியிட்டு அதில் ஐந்து முக்கிய அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக உள்ள விபரங்களையும் குறிப்பிட்டுள்ளது. இதனால் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. மேலும் இந்த டைரியில் ஒருசில பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.