"கொரோனா வைரஸைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளோம்"..! இந்து மகா சபா தலைவர்.

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் 29 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு இதைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளதாக இந்து மகாசபா தலைவர் சக்ரபாணி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாததால் உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸிற்கு 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000-க்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 ஆக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மாட்டுக்கோமியம் சர்வலோக நிவாரணி என இந்து மகாசபை தலைவர்களும் பாஜக ஆதரவாளர்களும் தெரிவித்து வந்தனர். இது அறிவியல் மருத்துவ முறைப்படி நிரூபிக்க முடியாததால் பலரால் கிண்டலடிக்கப்பட்டது.

நேற்று இந்து மகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ் இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது டீ பார்ட்டி போல் நடத்தப்படும் எனவும் இங்கு கொரோனா பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான விளக்கமும், கோமியமும், மாட்டுச்சாணம், பால் போன்றவையும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துளளார். இந்த கோமியம், மாட்டுச்சாணம், பால் மற்றும் அகர் பத்தியால் வைரஸ் முற்றிலும் அழியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More News

என்னது? பிரதமர் ஹோலி கொண்டாட மாட்டாரா??? விரிவான செய்திகள் உள்ளே…

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப் படுத்தி இருந்தார். இதன் எதிரொலியாக, பிரதமர்

மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி: இன்று முக்கிய அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்திக்கிறார்.

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழ் திரைப்பட நடிகர் கைது 

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தமிழ் திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா சோலார் பேனல்கள் உதவியால் உப்புத் தண்ணீரை குடிநீராக்கிக் குடித்த மக்கள்..!

ஒரு அரசு சாரா நிறுவனமானது சோலார் பேனல்கள் உதவியோடு உப்பு நீரை தூய்மையான குடிநீராக்கும் திட்டத்தை கென்யாவில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 35,000 மக்கள் நல்ல குடிநீர் கிடைத்து அதை பருகி மகிழ்ந்தனர்.

கொரோனா அச்சம்.. ஒரு ஊரே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அவலம்..!

இங்குள்ள தெருக்கள் வீடுகள் எல்லாம் மிக அமைதியாக எதோ கைவிடப்பட்ட நகரம் போல் காட்சியளிப்பதாக ஹைதராபாத் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.