மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களில் நடிகர்களாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்கால் பகுதியில் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆதிக்கு எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் படத்தின் பாடல்களை ஆதி கம்போஸ் செய்து முடித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கி வருகிறார்.

More News

'வடசென்னை' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கடந்த சில நாட்களாக அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மூழ்கியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

'அட்டக்கத்தி' , 'மெட்ராஸ்' ஆகிய இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை: கமல்ஹாசன் வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்: ஏன் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு என்பதும், கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தினத்தன்று