கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்காக ரூ.7.42 கோடி நிதியுதவி செய்த நட்சத்திர தம்பதி

இந்தியா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகின் பல இடங்களில் நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர் அபீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த நட்சத்திர தம்பதிகள் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹாங்க்ஸ், தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார் என்பதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகை ஓல்கா குரிலென்கோ என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19

"போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை" என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.   

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது

தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

பிறந்து 6 நாட்களேயான பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து சிசுக்கொலை!!! 

21 ஆம் நூற்றாண்டிலும் சிலரிடம் பெண் பிள்ளை என்றால் தானாகவே ஒவ்வாமை வந்து விடுகிறது.