close
Choose your channels

அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

Saturday, July 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களின் உடல்நிலை குறித்து சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கோவிட்-19 இலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த மருத்துவமனை இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos