'பீஸ்ட்' தாக்கம் எதிரொலி: 'கே.ஜி.எப் 2' படத்திற்கு இவ்வளவு தியேட்டர்கள் தானா?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எப் 2’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் 'பீஸ்ட்’ படம் வெளியாகும் காரணத்தினால் கே.ஜி.எப் 2’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சுமார் 1000க்கும் அதிகமான திரையரங்குகள் இருக்கும் நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் 'பீஸ்ட்’ திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 'பீஸ்ட்’ ரிலீஸ் காரணமாக ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ள ‘கே.ஜி.எப் 2’ படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பதும் ஆனால் அந்த படம் சோலோவாக வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' படத்திற்காக முதல்வருடன் விஜய் இருக்கும் கட்-அவுட்: என்ன குறியீடு?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பேனர்கள் வைப்பதில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கும்

'தளபதி 66' படத்தில் இருந்து திடீரென விலகிய இயக்குனர்: என்ன காரணம்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

என் படம் டிராப் ஆனதுக்கு மோடி தான் காரணம்: நடிகர் ஆரி

 தன்னுடைய படம் தொடங்கப்படாமல் டிராப் ஆனதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என நடிகர் ஆரி, திரைப்பட விழா ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம்: சினிமாவில் இருந்தே விலகிய நடிகை

தான் சினிமாவில் இருந்து விலக சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம் தான் காரணம் என நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக பார்த்து ஆச்சரியம் அடைந்த சூர்யா: வைரல் புகைப்படம்!

நடிகர் சூர்யா முதல் முறையாக பார்த்து ஆச்சரியம் அடைந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.