close
Choose your channels

வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை: நடிகைக்கு உதவிய ஹிருத்திக் ரோஷன்!

Wednesday, April 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற பிரபல நடிகை ஒருவருக்கு ஹிருத்திக் ரோஷன் உதவி செய்ததையடுத்து அவருக்கு அந்த நடிகை நன்றி கூறியுள்ளார் .

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும், ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகப் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா ஆகியோர்களை அடுத்து தற்போது பிரீத்தி ஜிந்தாவும் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்று உள்ளார்.

அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததை அடுத்து அந்த குழந்தைகளை விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு ப்ரீத்தி ஜிந்தா அழைத்து வந்தார். நீண்ட தூர விமான பயணம் என்பதால் விமானத்தில் இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்ள அவர் மிகுந்த சிரமப்பட்டார். அவருடைய சிரமத்தை கவனித்த அதே விமானத்தில் வந்த பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு அவருக்கு உதவி செய்து உள்ளார்.

இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நம்முடைய வாழ்க்கையில் பலர் வருவார்கள், போவார்கள். ஆனால் உண்மையான நேரத்தில் உதவி செய்பவர்கள் ஒருசிலரே இருப்பார்கள். என்னுடைய குழந்தைகளை நீண்ட தூரம் விமான பயணத்தில் ஹிருத்திக் நன்றாக கவனித்துக்கொண்டார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.