அற்ப காரணம், தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி: அனாதையான 2 பெண் குழந்தைகள்!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

காஞ்சிபுரத்தில் அற்ப காரணத்தினால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த தம்பதியின் இரண்டு மகள்கள் அனாதையாக இருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் அருகே வினாயகபுரம் குப்பம்மாள் என்ற பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் கதிர்வேலு. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்

இந்த நிலையில் அடிக்கடி மணிமேகலை கணவர் மீது சந்தேகப்பட்டு கொண்டு இருந்ததாகவும் இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு வந்ததாகவும் தெரிகிறது. அந்த வகையில் நேற்று இரவும் மணிமேகலை தனது கணவர் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதன் பின்னர் நீண்ட நேரம் இரவில் அழுதுகொண்டே தூங்கியதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் கணவன் எழுந்து பார்த்த போது தனது எதிரில் மனைவி மணிமேகலை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் போலீஸ் விசாரணைக்கு ஆளாக வேண்டும் என்று பயந்து அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

காலையில் குழந்தைகள் இருவரும் விழித்தபோது அப்பா அம்மா இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அற்பதனமான சந்தேக நோயால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாக உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது

More News

ரஜினி பிறந்த நாளில் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ஏன்? யுவன் போட்ட புதிர்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில்

அமெரிக்காவின் கதையை மாற்றிய இருவர்… டைம் இதழின் புதிய கவுரம்!!!

உலகின் பிரபல பத்திரிக்கையான டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது.

கோலியா??? டோனியா??? காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா???

இந்திய கிரிக்கட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் டோனி குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு உள்ளது

தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாதா??? விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!!

ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ரியோவுக்கு ஒரு குறும்படம்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் குரூப்பிஸம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது மட்டுமின்றி அந்த குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு பொய்யர்கள் என்பதும் தெரிய வருகிறது.