மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பன்: புகார் அளிக்க சென்ற கணவர் போக்சோவில் கைது!


Send us your feedback to audioarticles@vaarta.com


மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பனை புகார் கூறுவதற்காக காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல்துறையினர் புகார் அளிக்க வந்த கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காலித் ஹாசன் என்பவர் திருமணமாகி வேலை செய்வதற்காக தனது மனைவியுடன் சென்னை வந்தார். சென்னையில் அவருடைய நண்பர் தபரூக் ஹூசைன் வீட்டில் தங்கி இருவரும் கட்டிட வேலை செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் காலித் ஹாசன் நேற்று வேலைக்கு கிளம்பி போது அவருடைய நண்பர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வேலைக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். இதனை அடுத்து காலித் ஹாசன் மட்டும் தனியாக வேலைக்கு சென்றார்.
காலித் ஹாசன் வேலைக்கு சென்றவுடன் அவருடைய மனைவி குளிக்கச் சென்ற போது மறைந்திருந்து வீடியோ எடுத்த காலித் ஹாசன் நண்பர் தபரூக் ஹாசன், பின்னர் அவரை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது கணவர் வந்தவுடன் காலித் ஹாசன் மனைவி கூறிய நிலையில் இருவரும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது காலித் ஹாசன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அதன்பிறகு 15 வயது சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக காலித் ஹாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவருடைய மனைவியை வீடியோ குளிக்கும்போது வீடியோ எடுத்த அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments