விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து: மடக்கி பிடித்த பொதுமக்கள்!

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

குடும்ப சண்டை காரணமாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மெடிக்கல் ரெப் அதே பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி சதீஷ் மற்றும் ஜோஷி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஜோஷி தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், குடித்துவிட்டு அடிக்கடி ஜோஷியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜோஷி வேலை பார்த்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்ற சதீஷ், அவரிடம் விவாகரத்து நோட்டீஸ் ஏன் அனுப்பினாய்? என்று கூறி சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ஜோஷியை கத்தியால் குத்திவிட்டு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்கு கத்திக்குத்து நடந்ததைப் பார்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சதீஷை மடக்கிப்பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்ஷை கைது செய்து, ஜோஷியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஜோஷிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

More News

நாளை பூமியின் வெளிப்புறச் சுற்றுப்பாதையை பதம் பார்க்க இருக்கும் சிறிய கோள்… பீதியைக் கிளப்பும் தகவல்!!!

பூமியின் வெளிப்புற சுற்று வட்டப் பாதையில் நாளை சிறிய கோள் ஒன்று மோத இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

பிக்பாஸ் எத்தனை மணிக்கு? கேள்வி கேட்ட கமல், ரஜினி பட நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டு நேற்று முதல்நாள் நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்பதும் முதல் நாளே விறுவிறுப்பாக சென்றது என்பதும் தெரிந்ததே.

ஜேம்ஸ்பாண்ட் படத்தை அடுத்து மேலும் ஒரு ஹாலிவுட் பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கத்தில் நயன்தாரா? ஆச்சரிய தகவல் 

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் அறிமுக இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களுடன் கூட நடிக்க தயங்க மாட்டார் என்பது தெரிந்ததே.

அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'மெர்சல்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே