close
Choose your channels

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து: மடக்கி பிடித்த பொதுமக்கள்!

Tuesday, October 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடும்ப சண்டை காரணமாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மெடிக்கல் ரெப் அதே பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி சதீஷ் மற்றும் ஜோஷி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஜோஷி தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், குடித்துவிட்டு அடிக்கடி ஜோஷியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜோஷி வேலை பார்த்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்ற சதீஷ், அவரிடம் விவாகரத்து நோட்டீஸ் ஏன் அனுப்பினாய்? என்று கூறி சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ஜோஷியை கத்தியால் குத்திவிட்டு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்கு கத்திக்குத்து நடந்ததைப் பார்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சதீஷை மடக்கிப்பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்ஷை கைது செய்து, ஜோஷியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஜோஷிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.