close
Choose your channels

தாயின் கண்முன்னே மகளை கொன்ற அரக்கன்!

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் மாமியார் கண்முன்னே மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்த கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்ன நீலாங்கரை என்ற பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். ஆனால் இவர் வேலைக்கு சரியாக செய்ய செல்லாமல் எந்த நேரமும் குடிபோதையில் இருப்பாராம். இவருக்கு கோமதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி கோமதி மீது ஹரி அடிக்கடி சந்தேகப்பட்டு கொண்டும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோமதிக்கு சென்னை மாநகராட்சியில் தற்காலிக வேலை ஒன்று கிடைத்தது. ஹரியும் வேலைக்கு சரியாக செல்லாததால் வீட்டு செலவுக்கு உதவும் என இந்த வேலைக்கு கோமதி சென்றார். ஆனால் ஏற்கனவே கோமதி மீது சந்தேகம் கொண்டிருந்த ஹரி, அவர் வேலைக்கு செல்வதால் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி சண்டை போட்டு இருந்தார் இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்க கோமதியின் தாயார் அவருடைய வீட்டுக்கு வந்து ஹரிக்கு புத்திமதி சொல்லி கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஹரி, தனது மாமியாரை வெளியே போங்கள் என்று ஆத்திரமாக சொல்லிவிட்டு தனது மனைவியின் கழுத்தை கரகரவென அறுக்க தொடங்கியுள்ளார்.

தன் கண் முன்னாடியே தனது மகளின் கழுத்தை அறுத்து கொன்று கொண்டிருக்கும் மருமகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் இருந்த தனது மகளை தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கோமதியின் தாயார் கதறி அழுதார் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஹரியை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக ஹரி-கோமதியின் இரண்டு குழந்தைகள் தற்போது தாய் தந்தையின்றி பரிதாபமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.