கட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

கட்டிலுக்குக் கீழே மனைவி பிணமாக இருக்கும் நிலையில் கட்டிலுக்கு மேலே கணவர் மூன்று நாட்கள் படுத்து தூங்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷெர்சிங் என்பவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 10 வயது குழந்தையும் உள்ளது. ஷெர்சிங் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவி ஆர்த்தியை கண்மூடித்தனமாக அடித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டு ஆர்த்தி தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவதுமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல் மீண்டும் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சென்ற ஆர்த்தி திரும்பவும் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஷெர்சிங் வீட்டில் இருந்து துர்வாடை அடித்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தபோது ஷெர்சிங் வீட்டில் குப்பென்று வாடை அடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து வீடு முழுவதும் சோதனை செய்தபோது ஷெர்சிங் படுத்து தூங்கிய கட்டிலுக்குக் கீழே ஒரு கப்போர்டு இருந்ததை கண்டு அதை வெளியே எடுத்து பார்த்தபோது அது ஆர்த்தியின் பிணம் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதுகுறித்து ஷெர்சிங்கிடம் போலீசார் விசாரித்த போது கடந்த 2 நாட்களுக்கு முன்பே தனது மனைவியை கொன்று விட்டதாகவும் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கட்டிலுக்குக் கீழே கப்போர்டு தயார் செய்து அதில் சடலத்தை வைத்து பூட்டி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கட்டிய மனைவியை கொன்று கட்டிலுக்குக் கீழே கப்போர்டில் வைத்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்

பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

பட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இருப்பதாக தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி, இந்தியத் திரையுலகில் மட்டுமன்றி,

கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்???

கொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ராவணன்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வா??? மனேஜர் அளித்த பரபரப்பு விளக்கம்!!!

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் டோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார்.