close
Choose your channels

கட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கட்டிலுக்குக் கீழே மனைவி பிணமாக இருக்கும் நிலையில் கட்டிலுக்கு மேலே கணவர் மூன்று நாட்கள் படுத்து தூங்கிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷெர்சிங் என்பவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 10 வயது குழந்தையும் உள்ளது. ஷெர்சிங் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவி ஆர்த்தியை கண்மூடித்தனமாக அடித்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டு ஆர்த்தி தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவதுமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல் மீண்டும் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சென்ற ஆர்த்தி திரும்பவும் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஷெர்சிங் வீட்டில் இருந்து துர்வாடை அடித்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தபோது ஷெர்சிங் வீட்டில் குப்பென்று வாடை அடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து வீடு முழுவதும் சோதனை செய்தபோது ஷெர்சிங் படுத்து தூங்கிய கட்டிலுக்குக் கீழே ஒரு கப்போர்டு இருந்ததை கண்டு அதை வெளியே எடுத்து பார்த்தபோது அது ஆர்த்தியின் பிணம் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதுகுறித்து ஷெர்சிங்கிடம் போலீசார் விசாரித்த போது கடந்த 2 நாட்களுக்கு முன்பே தனது மனைவியை கொன்று விட்டதாகவும் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கட்டிலுக்குக் கீழே கப்போர்டு தயார் செய்து அதில் சடலத்தை வைத்து பூட்டி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கட்டிய மனைவியை கொன்று கட்டிலுக்குக் கீழே கப்போர்டில் வைத்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.