62 முதியவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் மனைவி: உயிரோடு எரித்துக் கொளுத்திய கணவர்

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

சென்னையில் 62 முதியவர் ஒருவருடன் தனது இளம் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் கள்ளக்காதலனையும், மனைவியையும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் முருகன் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமிக்கு தனது வீட்டின் அருகில் உள்ள 62 வயது முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாகவும் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட செந்தில் வெல்முருகன் தன் மனைவியை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலன் வீட்டிற்கு லட்சுமி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் வேல்முருகன் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவருடைய மனைவியோ கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பெட்ரோல் எடுத்துக் கொண்டு மனைவியின் கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற செந்தில் வெல்முருகன், கள்ளக்காதலன் மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், கள்ளக்காதலர் மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் செந்தில் வேல்முருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயார் இறந்த நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றுவிட்டதால் தற்போது அவர்களுடைய மகள் அனாதையாக இருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More News

இனப்பாகுப்பாட்டு எதிராக கருத்துத் தெரிவித்த போப் மற்றும் ஐ.நா அமைப்பு!!!

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இனப்பாகுபாட்டு ரீதியில் கொல்லப்பட்டதற்கு எதிராக தற்போது உலகம் முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது

10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரனோ: அதிர்ச்சி தகவல் 

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடைக்கானலில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத கொடைக்கானலுக்கு

அண்ணனை காதலித்து கர்ப்பமான 17 வயது சிறுமி: குமரியில் பரபரப்பு

17 வயது சிறுமி ஒருவர் தனது அண்ணன் முறை உறவுள்ள ஒருவரை காதலித்து கர்ப்பமான சம்பவம் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்ப்பிணி யானை கொலை குறித்து விஜயகாந்த் கருத்து:

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே மலப்புரம் என்ற பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடிமருந்து வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்து அந்த கிராமத்தினர் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்

மத்திய அமைச்சருக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.