close
Choose your channels

மனைவியுடன் கள்ளக்காதல்: வாலிபரை உயிரோடு கொளுத்திய கணவரால் பரபரப்பு

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்த வாலிபரை அவரது கணவர் உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என்ற பகுதியை அடுத்த தேவலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அபிராமிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ராஜேஷின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென மணிகண்டன் ராஜேஷின் வீட்டுக்குள் சென்று பெட்ரோல் கேனை எடுத்து வந்து ராஜேஷின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடல் முழுதும் எரிந்து 90% தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய ராஜேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.