ஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

பேஸ்புக்கில் நட்பான இளைஞர் ஒருவரிடம் தனது மனைவி மணிக்கணக்காக மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவரின் மனைவி ஜான்னெஜக். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ளார். ஜான்னெஜக் குடும்ப தலைவியாக இருந்து வரும் நிலையில் ஓய்வு நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உள்ளார். அப்போது பேஸ்புக்கில் இளைஞர் ஒருவருடன் நட்புடன் இருந்துள்ளார் அந்த இளைஞனுடன் ஜான்னெஜக் மணிக்கணக்கில் செல்போனில் பேசியுள்ளார். இதை அவ்வப்போது கவனித்த கணவரை கண்டித்துள்ளார். ஆனால் கணவரின் கண்டிப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த ஃபேஸ்புக் இளைஞருடன் ஜான்னெஜக் மொபைல் போனில் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சர்புதீன் கூட கவனிக்காமல் ஃபேஸ்புக் இளைஞருடன் ஜான்னெஜக் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சர்புதின் கையில் கிடைத்த கத்தியை எடுத்து சரமாரியாக மனைவியை கழுத்து முதுகு உள்ளிட்ட பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் வந்து ஜான்னெஜக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் சர்புதீன் கைது செய்யப்பட்டார்

ஃபேஸ்புக் நட்பால் கணவர் சிறையிலும், மனைவி மருத்துவமனையிலும் 12 வயது மகன் ஆதரவில்லாமலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

18 ஆண்டுகள் கழித்து வெளியாகும் மணிரத்னம் இயக்காத திரைப்படம்!

மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' என்ற திரைப்படத்தின்  ரிலீஸ் தேதி பிப்ரவரி 7 என ஏற்கனவே

சென்னையில் 68 பேருக்கு கரோணா வைரஸ் பாதிப்பு அறிகுறி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! தமிழக சுகாதார செயலாளர்.

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மாலையுடன் முடிவடைந்து நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார்.

டெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற சாய்னா, அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அருன் சிங் முன்னிலையில், தனது சகோதரி சந்த்ரான்ஸ்ஷுவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

கரீபியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கியூபா, ஜமைக்கா உள்ளிட்ட சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது.