close
Choose your channels

ஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேஸ்புக்கில் நட்பான இளைஞர் ஒருவரிடம் தனது மனைவி மணிக்கணக்காக மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவரின் மனைவி ஜான்னெஜக். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ளார். ஜான்னெஜக் குடும்ப தலைவியாக இருந்து வரும் நிலையில் ஓய்வு நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உள்ளார். அப்போது பேஸ்புக்கில் இளைஞர் ஒருவருடன் நட்புடன் இருந்துள்ளார் அந்த இளைஞனுடன் ஜான்னெஜக் மணிக்கணக்கில் செல்போனில் பேசியுள்ளார். இதை அவ்வப்போது கவனித்த கணவரை கண்டித்துள்ளார். ஆனால் கணவரின் கண்டிப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த ஃபேஸ்புக் இளைஞருடன் ஜான்னெஜக் மொபைல் போனில் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சர்புதீன் கூட கவனிக்காமல் ஃபேஸ்புக் இளைஞருடன் ஜான்னெஜக் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சர்புதின் கையில் கிடைத்த கத்தியை எடுத்து சரமாரியாக மனைவியை கழுத்து முதுகு உள்ளிட்ட பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் வந்து ஜான்னெஜக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் சர்புதீன் கைது செய்யப்பட்டார்

ஃபேஸ்புக் நட்பால் கணவர் சிறையிலும், மனைவி மருத்துவமனையிலும் 12 வயது மகன் ஆதரவில்லாமலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.