மருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

மனைவிக்கு வந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

கோவா மாநிலத்தில் கூலித் தொழில் செய்து வரும் துக்காராம் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவியின் சிகிச்சைக்கு தனது கூலி வேலையில் கிடைத்த வருமானத்தில் கஷ்டப்பட்டு சிகிச்சை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு இருந்த நிலையில் திடீரென ஒருநாள் தனது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் உயிருடன் மனைவியை புதைத்து விட்டதாக தெரிகிறது.

துக்காராம் வீட்டில் அவருடைய மனைவியை சில நாட்களாக காணவில்லை என்றதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் இது குறித்து சரியான பதில் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து துக்காராமிடம் விசாரித்த போது தனது மனைவியின் சிகிச்சைக்கு தன்னிடம் பணம் இல்லாததால் வேறு வழியின்றி உயிரோடு புதைத்து விட்டதாக கூறி புதைத்த இடத்தை அவர் காண்பித்துள்ளார். சிகிச்சைக்கு பணம் இல்லாத ஏழை கணவர் ஒருவர் உயிருடன் மனைவியை புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இரண்டு வருட பகையை தீர்த்த விராத் கோஹ்லி!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி!

மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென டான்ஸ் ஆடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி

விக்ரம் நடிப்பில் 'இமைக்காநொடிகள்' அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'விக்ரம் 58' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மணிரத்னம்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இயக்கும் படம் குறித்த தகவல்

லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அவர்களுக்கு சமீபத்தில் மலேசிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கியது. இதனை அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் சென்னையில்

தர்பார், பட்டாஸ் ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும்