close
Choose your channels

மருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவிக்கு வந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

கோவா மாநிலத்தில் கூலித் தொழில் செய்து வரும் துக்காராம் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவியின் சிகிச்சைக்கு தனது கூலி வேலையில் கிடைத்த வருமானத்தில் கஷ்டப்பட்டு சிகிச்சை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு இருந்த நிலையில் திடீரென ஒருநாள் தனது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் உயிருடன் மனைவியை புதைத்து விட்டதாக தெரிகிறது.

துக்காராம் வீட்டில் அவருடைய மனைவியை சில நாட்களாக காணவில்லை என்றதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் இது குறித்து சரியான பதில் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து துக்காராமிடம் விசாரித்த போது தனது மனைவியின் சிகிச்சைக்கு தன்னிடம் பணம் இல்லாததால் வேறு வழியின்றி உயிரோடு புதைத்து விட்டதாக கூறி புதைத்த இடத்தை அவர் காண்பித்துள்ளார். சிகிச்சைக்கு பணம் இல்லாத ஏழை கணவர் ஒருவர் உயிருடன் மனைவியை புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.