close
Choose your channels

இந்த இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும்: நடிகர் செந்தில் விளக்கம்

Wednesday, May 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் செந்தில் நேற்று டுவிட்டரில் இணைந்ததாக செய்தி வெளியானது. இதனை செந்தில் ஒரு அறிக்கை மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் செந்தில் டுவிட்டரில் இணைந்தது மற்றும் அவர் வெளியிட்ட அறிக்கை ஆகியவை பொய் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் செந்தில் உறுதி செய்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது.

பத்திரிகை ஊடகம் மற்றும் டிவி ஊடகம் ஆகிய இரண்டு ஊடகங்கள் மட்டுமே எனக்கு தெரியும். மற்ற ஊடகங்கள் எனக்கு தெரியவே தெரியாது. ட்விட்டர், பேஸ்புக் இவை எதுவும் எனக்குத் தெரியாது. தவறான முறையில் யாரோ பரப்பி வருகின்றனர். இதை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தற்போது அதிகமாக இருப்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். யார் நல்ல அறிவுரை சொன்னாலும் கேட்டு கொள்ளுங்கள் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். இந்த வீடியோவின் மூலம் நடிகர் செந்தில் டுவிட்டர் மட்டுமின்றி எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.