'ஆடையில்லாமல் கூட நடிக்க தயார், ஏனெனில் அதுதான் சினிமா: 49 வயது நடிகை பேட்டி..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஒரு கதைக்கு பொருத்தமாக இருந்தால் எந்த விதமான ஆடையும் அணிந்து நடிக்க வேண்டும், ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் ஒரு நடிகை தயாராக இருக்க வேண்டும், அதுதான் சினிமா’ என்று 49 வயது நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தமிழில் ஜோதிகா நடித்த ’சினேகிதியே’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு ’சாதுமிரண்டால்’ ’நான் அவன் இல்லை 2’ ‘இணையதளம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் அவர் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் ’நான் பொதுவாக அனைத்து படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த விமர்சனம் தேவையில்லாதது. ஒவ்வொரு படத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கின்றார்களோ, அந்த கேரக்டருக்கு என்ன உடை அணிய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்கிறேன்.
ஒரு கேரக்டருக்கு பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் அல்லது ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் நான் தயார், ஏனென்றால் அதுதான் சினிமா’ என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)