பகத் பாசில் - நஸ்ரியா காதலுக்கு நான் தான் காரணம்: பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

அஞ்சலி மேனன் இயக்கிய மலையாள திரைப்படமான 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் நிவின்பாலி, தல்கார் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா, பார்வதி, இஷா தல்வார் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையேதான் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது

இந்த நிலையில் நஸ்ரியா நடித்த திவ்யா கேரக்டரில் நடிக்க என்னிடம் தான் முதலில் இயக்குனர் அணுகினார் என்றும் அப்போது நான் வேறு சில படங்களில் நடித்து கொண்டிருந்ததால் அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியவில்லை என்றும், அதன்பின்னர் தான் அந்த கேரக்டருக்கு நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டதாகவும் நடிகை நித்யாமேனன் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் இந்த படத்தில் தன்னை மிஸ் செய்ய விரும்பாத இயக்குனர் அஞ்சலி மேனன், தனக்கு நடாஷா பிரான்சிஸ் என்ற சிறிய கேரக்டரை கொடுத்தார் என்றும் நித்யாமேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் திவ்யா கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் தான் உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது என அடிக்கடி பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவிடம் கூறுவேன் என்றும் நித்யாமேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

16 வயது சென்னை சிறுமியை திருமணம் செய்து நண்பருக்கு விருந்தாக்கிய வாலிபர்!

சென்னை திரு.வி.க நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

காமெடி சென்ஸ்சுக்கு அளவே இல்லை: போலீஸ் புகார் குறித்து பார்த்திபன் விளக்கம்

நடிகர், இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக இன்று போலீஸ் புகார் அளித்தார். இதுகுறித்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும்இடம்பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்?

கடந்த ஆண்டு சர்கார், சண்டக்கோழி, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2 என ஆறு தமிழ் படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா? சாந்தினி தமிழரசன் பதில்

பிக்பாஸ் இரண்டு சீசன்கள் முடிவடைந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் சமீபத்தில் கமலஹாசன் கலந்து கொண்டார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒருவழியாக வரும்  ஞாயிறுடன் முடிவுக்கு வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே உள்ளது.