close
Choose your channels

பகத் பாசில் - நஸ்ரியா காதலுக்கு நான் தான் காரணம்: பிரபல நடிகை

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஞ்சலி மேனன் இயக்கிய மலையாள திரைப்படமான 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் நிவின்பாலி, தல்கார் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா, பார்வதி, இஷா தல்வார் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையேதான் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது

இந்த நிலையில் நஸ்ரியா நடித்த திவ்யா கேரக்டரில் நடிக்க என்னிடம் தான் முதலில் இயக்குனர் அணுகினார் என்றும் அப்போது நான் வேறு சில படங்களில் நடித்து கொண்டிருந்ததால் அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியவில்லை என்றும், அதன்பின்னர் தான் அந்த கேரக்டருக்கு நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டதாகவும் நடிகை நித்யாமேனன் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் இந்த படத்தில் தன்னை மிஸ் செய்ய விரும்பாத இயக்குனர் அஞ்சலி மேனன், தனக்கு நடாஷா பிரான்சிஸ் என்ற சிறிய கேரக்டரை கொடுத்தார் என்றும் நித்யாமேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் திவ்யா கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் தான் உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது என அடிக்கடி பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவிடம் கூறுவேன் என்றும் நித்யாமேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.