எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேசமணியின் டிரெண்ட் குறித்து ராதாரவி கூறியபோது, 'ஐயோ, ரெண்டு நாளா எல்லாருமே இதையேதான் கேக்குறாங்க. இது என்னய்யா பெரிய அக்கப்போரா இருக்கு?. எனக்கு நேசமணின்னா யாருன்னு தெரியவே தெரியாதுங்க' என்று கூறியுள்ளார்.

அதேபோல் பழம்பெரும் அரசியல்வாதியும், 'எல்.கே.ஜி' படத்தில் நடித்தவருமான நாஞ்சில் சம்பத் 'நேசமணி' குறித்து கூறியபோது, 'எனக்கு நேசமணி என்றால் நினைவுக்கு வருபவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த நேசமணி தான் என்றும், மண்ணின் விடுதலைக்காக போராடி பல ஆபத்துக்களை சந்தித்து குமரிக் கண்டம் தமிழகத்துடன் இணைய எல்லா வகையிலும் காரணமாக இருந்தவர் தான் நேசமணி என்றும், எனக்கு அந்த நேசமணியை தவிர வேறு யாரையும் தெரியாது' என்றும் கூறினார்.

ஆனால் நடிகர் வடிவேலு குறித்து நாஞ்சில் சம்பத் கூறியபோதும் 'தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடத்தை யாராலும், நிரப்ப முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் அவர்' என்று புகழ்ந்தார்

More News

மோடி பதவியேற்பு விழாவுக்கு அஜித்-விஜய் பட நாயகிக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமர் மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்,

எனது உயிருக்கு ஆபத்து: நடிகை போலீஸ் புகார்

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசன் மனைவியாக நடித்தவர் மீரா மிதுன். இவர் தமிழ் பெண்களுக்காக ஒரு அழகி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் குறித்து வெளியான பட்டியல்

இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை நரேந்திரமோடி பதவியேற்கவுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்த பட்டியல் குறித்த செய்தி

மக்கள் பைத்தியக்காரர்களாக மாறிவிட்டார்கள்: நேசமணி டிரெண்ட் குறித்து பிக்பாஸ் பிரபலம்!

நேற்று முதல் நேசமணி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த டிரெண்ட் மூலம் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

சூர்யாவின் பிரமாண்டமான கட்-அவுட் அகற்றம்: ரசிகர்கள் சோகம்!

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.