close
Choose your channels

சூர்யாவின் பிரமாண்டமான கட்-அவுட் அகற்றம்: ரசிகர்கள் சோகம்!

Thursday, May 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஒன்றரை வருடங்கள் கழித்து சூர்யாவின் படம் வெளியாவதால் இந்த படத்தின் வெளியீட்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த ரசிகர்கள், 220 அடி உயரத்தில் கட் அவுட் ஒன்றை வைக்க முடிவு செய்தனர்.

சுமார் ரூ.6.5 லட்சம் செலவில் இரும்புக்கம்பிகள் ஆதரவுடன் இந்த கட்-அவுட்டை வைக்கும் பணியில் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு நேற்று மாலை முடித்தனர். திருத்தணி தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த இந்த கட்-அவுட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இந்த கட்-அவுட் நகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த கட்-அவுட் பெரிய காற்றடித்தால் கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த கட்-அவுட்டை தற்போது நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ரூ.6.5 லட்சம் செலவு செய்து வைக்கப்பட்ட கட்-அவுட் அகற்றப்படுவதை பார்த்து சூர்யா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.