ரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத வெற்றி குறித்து பிரபல நடிகர் தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் எடுத்தது. பின்னர் 180 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதனை அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 6 பந்தில் 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ரோகித் சர்மா அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியை அடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்த எதிர்பாராத வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வெற்றி குறித்து கருத்து கூறிய இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் ’இந்திய அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அந்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்தது நம்ப முடியாத வகையில் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பச்சனின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

குழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது!

குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்

LKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்..! பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.

எல்கேஜிக்கே நுழைவுத் தேர்வு எனும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாதா? ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர பொதுத் தேர்வு அவசியம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்-  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'கரோனா' வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொரோனா வைரஸ் மாதிரியை உருவாக்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.