கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், தனது ஜாதியினர் கொலை செய்துவிட்டு வந்தாலும் தன் சொத்தை விற்றாவது அவரது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் ஜாதீய ஆணவக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜாதி மோதல்களை தூண்டிவிடும்படி பேசிய கருணாசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் கருணாஸ் பேச்சை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது:

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டுக்காக கூட சாதி குறித்து பேசக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது. அது நியாயமானதும் கூட என்று கூறியுள்ளார்.

More News

கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிக்கின்றது: நடிகர் கார்த்திக் கருத்து

கருணாஸ் தம்பி அப்படி பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வது என்னவென்றால் தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை.

இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாசுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்: அதிமுக எம்எல்ஏ சவால்

சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், 'நான் அடிப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பயந்தார்'

கத்துவது, பொய் சொல்வது, அழுவது இதுதான் ஐஸ்வர்யாவின் வேலை: பிக்பாஸ் 1 பிரபலம்

ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து அவரை திட்டாதவர்களே இல்லை என கூறலாம்.

அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளது. 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' ஆகிய படங்கள் இவற்றில் முக்கியமானது