close
Choose your channels

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது: கமல்ஹாசன்

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், தனது ஜாதியினர் கொலை செய்துவிட்டு வந்தாலும் தன் சொத்தை விற்றாவது அவரது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் ஜாதீய ஆணவக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜாதி மோதல்களை தூண்டிவிடும்படி பேசிய கருணாசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் கருணாஸ் பேச்சை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது:

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டுக்காக கூட சாதி குறித்து பேசக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது. அது நியாயமானதும் கூட என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.