வங்கிக்கணக்கில் தானாக வந்த பணம்: மோடி அனுப்பியதாக நம்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு வேலை தேடி வந்த ஒரு ஹூக்கும்சிங் என்ற இளைஞர் எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்வதாக கூறிய வாக்குறுதியைத்தான் நிறைவேற்றி உள்ளதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை எடுத்து அவர் செலவு செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் பின் சில நாட்களில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹூக்கும்சிங் கணக்கை ஆரம்பித்த அதே நாளில் அதே பெயரை உடைய இன்னொருவரும் அதே எஸ்பிஐ வங்கியில் வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளார். ஒரே பெயரில் இருவர் ஒரே நாளில் வங்கிக் கணக்கு ஆரம்பித்ததால் வங்கி அதிகாரி தவறுதலாக இருவருக்கும் ஒரே வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.

இதனால் வங்கிக் கணக்கை ஆரம்பித்த இன்னொரு ஹூக்கும்சிங் தன்னுடைய வங்கி கணக்கில் பணம் போட்டு கொண்டே இருக்க, அதை வேலை தேடி வரும் ஹூக்கும்சிங் எடுத்து செலவு செய்து கொண்டே இருந்திருக்கின்றார்.

இந்த நிலையில் பணத்தை போட்டு கொண்டிருந்த ஹூக்கும்சிங் ஒரு நாள் தற்செயலாக தன்னுடைய வங்கி கணக்கில் இருக்கும் இருப்பை சரிபார்த்தபோது மிகவும் குறைவாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் வங்கியில் புகார் செய்தபோது தான், வங்கி அதிகாரிகளுக்கு தங்களுடைய தங்களுடைய தவறு தெரியவந்தது.

இதனை அடுத்து பணத்தை செலவு செய்த ஹூக்கும்சிங் அழைத்து அவர்கள் விசாரணை செய்தபோது அவர் அப்பாவியாக ’பிரதமர் மோடி தான் தன்னுடைய அக்கவுண்டில் பணம் போட்டு இருப்பார் என்றும் அதனால்தான் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ததாகவும் கூறினார். தற்போது இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

More News

சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகின்றனர்: தனியரசு எம்.எல்.ஏ

அதிமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி, கமல்

பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் பேட்: 12 வயது சிறுவன் மரணம்

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் கையிலிருந்து நழுவிய கிரிக்கெட் பேட், சிறுவனின் தலையில் விழுந்து அந்த சிறுவன்  மரணம் அடைந்த பரிதாபமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது 

சினிமா கூத்தாடிகளால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது: சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆளுமை வெற்றிடத்தை கமல்-ரஜினி கூட்டணி நிரப்பும் என கூறப்பட்டு வரும் நிலையில் அந்த வெற்றிடத்தை சினிமா கூத்தாடிகளால் நிரப்ப முடியாது

பஸ் டிக்கெட் இயந்திரத்தில் ஆபாச வீடியோ: பயணிகள் அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தின் ஸ்க்ரீனில் 30 வினாடிகள் ஆபாச வீடியோ திடீரென திரையிடப்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது