close
Choose your channels

சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகின்றனர்: தனியரசு எம்.எல்.ஏ

Saturday, November 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் ரஜினி கமல் ஆகிய இருவரை சுற்றியே நடக்கின்றது. குறிப்பாக ரஜினிகாந்த் அரசியல் குறித்து என்ன பேசினாலும் அது ஒரு வாரத்திற்கு ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் அவர் 'அதிசயம் அற்புதம்' குறித்து கூறிய ஒரு கருத்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது மட்டுமின்றி இன்று 2 பெரிய ஊடகங்கள் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விவாத மேடை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி கமல் ஆகிய இருவர் குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கருணாநிதி, எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல், விஜய் என அனைவரும் அரசியலைக் எடுத்து வைத்துள்ளதாகவும், ஒன்று சேர்ந்து வருவதாக ’16 வயதினிலே’ சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகிறார்கள் என்றும், ரஜினி-கமல் இணைந்தால் ஒரு வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியரசு எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினி கமலை எதிர்த்து பேசினால் தான் தங்களுடைய பெயரும் ஊடகங்களில் வரும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு பேசுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.