close
Choose your channels

எனது தேவை பூர்த்தியானதும் சினிமாவில் இருந்து விலகுவேன்: பிரபல நடிகை!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனது தேவை பூர்த்தியானதும் நான் சினிமாவில் இருந்து விலகுவேன் என பிரபல நடிகை ஒருவர் அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’வை ராஜா வை’, ‘காஞ்சனா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது டாப்சி இந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை டாப்ஸி, ‘எனக்கு வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் எனக்கு தேவையான பணம் சம்பாதித்தும், எனது தேவை பூர்த்தி ஆனதும், சினிமாவில் இருந்து வெளியேறுவேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’எனக்கு பணக்கார வாழ்க்கை வாழ விருப்பமில்லை என்றும் நடுத்தர மக்கள் போல் வாழத்தான் ஆசை என்றும் இப்போது கூட ஒரு பொருள் வாங்க சென்றால் பத்து முறை யோசித்து, பேரம் பேசி தான் வாங்குவேன்’ என்று நடிகை டாப்சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.