'பாகுபலி' போன்ற படம் இயக்குவதை மிஸ் செய்தது எப்படி? சுசீந்திரன்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் சுசீந்திரன் 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா, 'பாண்டியநாடு', ஆதலினால் காதல் செய்வீர்', பாயும் புலி' போன்ற வெற்றி படங்களை இயக்கி இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். அவரது படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துக்களுடன் கமர்ஷியலும் கலந்து இருப்பதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய 'ராஜபாட்டை' படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அந்த சமயத்தில் 'பாகுபலி' போன்ற பிரமாண்டமான படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக 'ராஜபாட்டை' படம் தோல்வி அடைந்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கி வந்த 'அறம் செய்து பழகு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
விக்ராந்த், சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள 'அறம் செய்து பழகு' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காசி விஸ்வாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

More News

ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அதர்வா தற்போது 'செம போத ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்...

கொழுந்துவிட்டு எரிகிறது 27 மாடி கட்டிடம்: 300க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

சென்னை தி.நகரில் உள்ள 7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையாகி 15 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இடிபாடுகள் முழுவதும் அகற்ற முடியாத நிலை உள்ளது.

உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் 3 இந்தியர்கள்

உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலகில் அதிகம் சம்பளம் பெறும் 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய நடிகர்களான  ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்...

முதல்வரை அடுத்து வரலட்சுமி சந்தித்த இன்னொரு விவிஐபி

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று சந்தித்து தனது புதிய அமைப்பான ஷேவ் சக்தி' குறித்து விளக்கம் அளித்ததோடு, பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக சில கோரிக்கைகளை முன்வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்தை திணறடித்த அனிருத்தின் ஐம்பது

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று அஜித்தின் 'விவேகம்'. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தீம் சாங் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளது...