close
Choose your channels

'ஓ சொல்றியா' பாடலுக்கு டான்ஸ் ஆட மறுத்தாரா சமந்தா?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’புஷ்பா’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைய சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் ஒரு முக்கிய காரணம் என்றும், ‘ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா’ என்ற பாடல் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு ஆண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்து வழக்கு பதிவு செய்திருந்தாலும் ஆந்திராவில் உள்ள இளைஞர்களும் இந்த பாடலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தின் இயக்குனர் சுகுமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’முதலில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு சமந்தா தயங்கியதாகவும், அதன்பின்னர் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தோம் என்றும் கூறினார். பிரபல நடிகை பூஜா ஹெக்டே, சமந்தா நடித்த ’ரங்கஸ்தலம்’ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார் என்பதை எடுத்துக்காட்டிய பின்னரே சமந்தா இந்த பாடலுக்கு டான்ஸ் ஆட சம்மதித்தார் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து முதலில் சமந்தா ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதன் பின்னர் தற்போது இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியை சமந்தா வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.