இளையராஜாவின் 1417வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. ஒரு படத்திற்கு சராசரியாக 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவர் 5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை உலகின் வேறு ஒரு இசையமைப்பாளர் செய்வாரா என்பது சந்தேகமே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் இளையராஜாவின் இசையமைக்கும் அடுத்த படம் குறித்த டைட்டில் வெளியாகியுள்ளது. ஆதிராஜன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு ’நினைவெல்லாம் நீயடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முழு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த ஆண்டு மட்டும் சுமார் 20 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் 1500வது படத்துக்கு இசையமைப்பார் என்றும் இசைஞானியின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

விபத்தில் சிக்கிய மணிமேகலை: நடந்தது என்ன?

விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து நிகழ்ந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள்

இரண்டு தயாரிப்பாளர் சங்கங்களும் இணைகிறதா? முக்கிய அறிக்கை1

தமிழ் திரைஉலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் இருந்து வரும் நிலையில் மேற்கண்ட இரண்டு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரிட்டன் பெண் தொழிலதிபர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு!

கேரள அரசின் ஓணம் பண்டிகைக்கான பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்றுமுன்தினம்

ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது!

ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்குக் கடத்தி