இந்த நாடே தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது: இளையராஜா நகைச்சுவை

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

இசைஞானி இளையராஜா சமீபத்தில் கவிக்கோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நாடு தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுபோல நாமும் அதே வழியில் போய் கொண்டிருக்கின்றோம் என்று தற்கால அரசியலை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் நான் இந்த விழாவுக்கு வந்த பின்னர் 'இளையராஜா இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்துவார்' என்று யாராவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் சொல்லவில்லை. அப்புறம் எப்படி நான் தலைவர்? இந்த நாடே தற்போது தலைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது அதனால் நாமும் அப்படியே போவோம். நாம் இல்லாமல் நாடு இல்லை, நாம் தான் நாடு. நான் யாருக்கும் தலைவர் இல்லை, இறைவனுக்கு மட்டுமே தொண்டன்' என்று கூறினார்.
மேலும் அவர் பேசியபோது, 'கவிக்கோ அவர்கள் செய்த சாதனையை இந்த நாட்டில் ஏன் இந்த உலகில் யாரும் செய்தது இல்லை என்று சொல்லலாம். அவர் அறிமுகமான பின் அவர் எழுதியிருக்கிற அற்புதமான விஷயங்களை படித்தேன். எழுத்தும் எழுத்து உடையாருக்கு என்பேன் நான். உடையார் என்றதுமே வேற உடையாரை நினைக்காதீர்கள்.
கவிஞர் கண்ணதாசன் சொன்னார் கலீல் ஜிப்ரானை படிக்கும்போது எல்லாம் இது போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். இப்பொழுது அப்துல் ரகுமான் வந்துவிட்டார், என் கவலை தீர்ந்தது என்று கூறினார்

More News

15 வயது சிறுமியுடன் 4வது திருமணம். தடுத்து நிறுத்திய 3 முன்னாள் மனைவிகள்

கடந்த சில காலமாக முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்...

ரஜினி படத்தை இயக்குவது எப்போது? ராஜமெளலி பதில்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை இந்த படம் இன்னும் ஒருசில நாட்களில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நீதிபதி கர்ணனுக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சோதனை

கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதால் சுப்ரீம் கோர்ட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஏப்ரல&

'பாகுபலி 2' படத்தின் 6 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் செய்ததோடு, வசூலிலும் புதிய சாதனன படைத்து வருகிறது.

லண்டனில் வாள்வீச்சு பயிற்சி பெரும் பிரபல நடிகை

இந்தியாவின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் துணிச்சலாக பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.