'பைரவா' படத்தின் கதை இதுதானா?

  • IndiaGlitz, [Wednesday,January 04 2017]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் இந்தியாவில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் சிங்கப்பூரில் PG 13 சான்றிதழை பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவின் 'யூ/ஏ சான்றிதழுக்கு சமமானது.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்சாரில் இந்த படத்தின் கதை ஒருசில வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்படி 'பைரவா' படத்தின் கதை என்பது 'நாயகனின் காதலி ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை நாயகன் கையில் எடுக்கின்றார். மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் பல மில்லியன் டாலர் வணிகம் செய்யும் ஒரு நேர்மையற்ற, ஊழல் நபருக்கு எதிரான நாயகனின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று சென்சார் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து 'பைரவா' படத்தின் கதை, ஆக்சன் மற்றும் விறுவிறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகலா எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன். தீபா ஆவேச பேட்டி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த அவரது தோழி சசிகலா...

கார்த்தியின் முதல் பாலிவுட் படம் இதுதான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது...

விஜய்-அஜித். யாருக்கு முதலிடம். காஜல் அகர்வாலின் புத்திசாலித்தனமான பதில்

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்களின் நாயகியும், அஜித்...

விஜய் படத்துக்குப் போட்டியாக மற்றொரு விஜய் படத்தின் ரீமேக்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்பதையும், இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.