close
Choose your channels

'பைரவா' படத்தின் கதை இதுதானா?

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் இந்தியாவில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் சிங்கப்பூரில் PG 13 சான்றிதழை பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவின் 'யூ/ஏ சான்றிதழுக்கு சமமானது.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்சாரில் இந்த படத்தின் கதை ஒருசில வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்படி 'பைரவா' படத்தின் கதை என்பது 'நாயகனின் காதலி ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை நாயகன் கையில் எடுக்கின்றார். மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் பல மில்லியன் டாலர் வணிகம் செய்யும் ஒரு நேர்மையற்ற, ஊழல் நபருக்கு எதிரான நாயகனின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று சென்சார் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து 'பைரவா' படத்தின் கதை, ஆக்சன் மற்றும் விறுவிறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.