இன்றைய இசையுலகம் திருப்பதி மொட்டை மாதிரி உள்ளது. இளையராஜா

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

இசைஞானி இளையராஜா சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் னது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பில் அவரிடம் பணிபுரிந்த பல இசைக்கலைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தற்போதைய இசை குறித்தும், இசையமைப்பாளர் குறித்தும் இசைஞானி வேதனையுடன் ஒருசில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஓலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது இல்லை. அந்த காலகட்டம் முடிந்து போய் விட்டது.
இதற்கு அர்த்தம் என்னவென்றால், மியூசிக் போடுகிறவர்கள் தற்போது இல்லை. மியூசிக் வாசிக்கிறவர்கள் இல்லை. மியூசிக் பாடுகிறவர்களும் இல்லை. சினிமாவில் கையை காலை ஆட்டுகிற மாதிரி, இசை என்ற பெயரில் சும்மா ஏதோ நடக்கிறது. இங்கு பாடுகிறவர்களும் இனிமேல் பாடப்போவது இல்லை. காரணம் பாடல்களுக்கான டியூன் இல்லை.
எவ்வளவோ மிகப்பெரிய உயர்ந்த விஷயமாக இந்த இசை இருந்தது. எத்தனை ராகங்கள், எவ்வளவு கலப்புகள், எவ்வளவு வாத்திய கருவிகள், வாசிக்கும் விதங்கள்தான் எத்தனை, எத்தனை உணர்வுகள் எல்லாம் போய்விட்டன. திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சிட்டு வந்த மாதிரி அத்தனையும் சுத்தமாக போய்விட்டன. புருவத்தையும் சேர்த்து எடுத்து விட்டான். புருவத்தை எடுத்த மாதிரி, மொட்டை அடித்த மாதிரி, இப்போது இசை உலகமும், திரையுலகமும் ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் இசை உலகம் சிதைந்து விட்டது.
இவ்வாறு இளையராஜா பேசினார்.

More News

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி தள்ளிவைப்பா?

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

இயக்குனர் சிகரத்திற்கு சிலை எடுக்கும் பிரபல கவிஞர்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் தான் இன்று முன்னணியில் இருக்கும் பல நட்சத்திரங்கள். கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், உள்பட பலருக்கு இன்னமும் அவர்தான் மானசீக குரு

அர்த்தம் தெரியாமல் நடித்தார் அனுராக் காஷ்யப்: 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்.

என் பேரன் கல்யாணத்திற்குள்ளாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா? பிரபல அரசியல் தலைவர் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக முதல்வருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று திடீரென சந்தித்தார்.