ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் ராஜாவையும் தடுப்பார்களா?

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததும், பின்னர் ஒருசில அரசியல்வாதிகளின் எதிர்ப்பு காரணமாக ரஜினிகாந்த் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதும் தெரிந்ததே.


இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜூன் மாதம் இசைஞானி இளையராஜாவின் மேடைக்கச்சேரி ஒன்று நடைபெறவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைஞானி ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் என்பதாகவும் கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்ள தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை போல ராஜா பின்வாங்குவாரா? அல்லது அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஐடி சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம். 85% வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராய் இரைத்து கொண்டிருக்கும் தகவல்கள் காரணமாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் ஒரு முக்கிய ஆவணம் சிக்கியிருப்பதாகவும், அதில் ஆர்.கே.நகரில் உள்

கால் நூற்றாண்டு இசை சரித்திரம்

இந்த 2017 தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மணிரத்னத்தின் இருபத்தைந்தாவது திரைப்படமான 'காற்று வெளியிடை' வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டுடன் AR ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் கழிகின்றன. மணிரத்னமும் ரஹ்மானும் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து க

டாஸ்மாக் கடைகளுக்கு இடம் வாடகைக்கு கொடுத்தால்? வாட்ஸ் அப்-இல் பரவி வரும் ஒரு வினோத எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அருகில் இருந்த சுமார் 3000க்கும் அதிகமான கடைகள் இழுத்து மூடப்பட்டது. இந்த கடைகளை வேறு இடத்தில் மாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் 500 மீட்டருக்கு அப்பால் வாடகைக்கு இடம் பிடிக்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிபாரிசின் பேரில் தேசிய விருதுகள். ஏ.ஆர்.முருகதாஸ் ஆதங்கம்

64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுக்கு தேர்வு பெற்ற ஒருசிலர் பாரபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினகரனை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனந்த்ராஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் விசுவாசியாக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ்