close
Choose your channels

ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் ராஜாவையும் தடுப்பார்களா?

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததும், பின்னர் ஒருசில அரசியல்வாதிகளின் எதிர்ப்பு காரணமாக ரஜினிகாந்த் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதும் தெரிந்ததே.


இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜூன் மாதம் இசைஞானி இளையராஜாவின் மேடைக்கச்சேரி ஒன்று நடைபெறவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைஞானி ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் என்பதாகவும் கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்ள தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை போல ராஜா பின்வாங்குவாரா? அல்லது அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.