இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விபரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்ததால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை தற்போது பார்ப்போம்

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 23 திரையரங்க வளாகங்களில் 280 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.73,52,770 வசூல் செய்தது. ஜல்லிக்கட்டு போராட்ட நிலையிலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் கூடியிருந்தனர். மேலும் இந்த படம் கடந்த 12ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.5,74,40,270 வசூல் செய்துள்ளது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் 16' திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 7 திரையரங்க வளாகங்களில் 50 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.13,98,340 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் ரூ.1,32,91,950 ஆகும். வசூல் அளவில் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று

வின் டீசல் மற்றும் தீபிகா படுகோனேவின் XXX Return of Xander Cage திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 11 திரையரங்குகளில் 67 காட்சிகள் ஓடி ரூ.12,66,440 வசூல் செய்தது. 85 % பார்வையாளர்கள் நிரம்பியிருந்த இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.51,81,730 என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கானின் டங்கல் சென்னையில் கடந்த வாரம் 7 திரையரங்குகளில் 38 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.11,63,020 வசூல் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.,26,99,970 ஆகும்.

More News

நானும் தமிழ் பொறுக்கிதான். ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன். கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலக நாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழர்களை பொறுக்கி என கூறிய பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியம் சுவாமிக்கு நேற்று நடந்த விழா ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

பீட்டா ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் பதிலடி

நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்...

மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி. சென்னை திரும்புகிறார் முதல்வர்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் ஜல்லிக்கட்டு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர் சென்னை திரும்புகிறார்...

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசை வலியுறுத்தினார்...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது...