பிகில், மாஸ்டர் திரைபடங்களுக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? வருமான வரித்துறையினர் தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

தளபதி விஜய் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரெய்டு முடிவடைந்ததாகவும் இதனை அடுத்து அவர்கள் வெளியிட்ட தகவல் குறித்தும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

தளபதி விஜய் வீட்டில் கடந்த மாதம் நடைபெற்ற ரெய்டின்போது இரண்டு அறைகள் சீல் வைக்கப்பட்டதாகவும், அந்த அறைகளின் சீல்கள் தற்போது அகற்றப்பட்டதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் நடிகர் விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் ’மாஸ்டர்’ திரைப்படங்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். பிகில் படத்திற்கு நடிகர் விஜய் ரூபாய் 50 கோடி சம்பளம் பெற்றதாகவும், தற்போது அவர் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூபாய் 80 கோடி சம்பளம் பெற்றதாகவும், இந்த இரண்டு திரைப்படத்திற்கும் வாங்கிய சம்பளத்திற்கு அவர் முறையாக வருமான வரி செலுத்தியிருப்பதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் நடிகர் விஜய் தொடர்பாக வருமான வரித்துறை வழக்கு முடிவுக்கு வந்ததாகவும் வருமானவரித்துறையினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு ’புலி’ படத்தின் போது வருமான வரி சோதனை நடைபெற்ற பின்னர் விஜய், முறையாக வரி செலுத்தி வருவதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான

ரஜினியின் முடிவை வரவேற்கிறோம்: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்: 'கோப்ரா' இயக்குனர் அதிருப்தி

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில்

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது.

கொஞ்சம் இதையும் கவனிங்க... பிரதமருக்கு ராகுல் காந்தி கூறியிருக்கும் அறிவுரை!!!

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ.க வே காரண