close
Choose your channels

அமெரிக்காவில் இந்திய மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை: அதிர்ச்சி தகவல்

Tuesday, November 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய மாணவி ஒருவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹைதராபாத்தை சேர்ந்த என்ற 19 வயது இளம்பெண் ரூத் ஜார்ஜ், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு பிணமாக இருந்ததை கண்டு பல்கலைக்கழக மாணவ மாணவியர் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டொனால்ட் துர்மன் என்ற 26 வயது இளைஞரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

அதிகாலை 1 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ரூத் ஜார்ஜ் உள்ளே நுழைந்ததும், அவரைப் பின்தொடர்ந்து ஒரு நபர் சென்ற காட்சியும் சிசிடிவி வீடியோவில் உள்ளது. இதனை வைத்து விசாரணை செய்த போலீசார் ரூத் ஜார்ஜை பின்தொடர்ந்த நபர் டொனால்ட் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

விசாரணையில் ரூத் ஜார்ஜ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து டொனால்ட் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூத் ஜார்ஜ் ஒரு மிகச்சிறந்த மாணவி என்றும், ஹெல்த் பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற கனவில் இருந்ததாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் இழப்பு என்றும் பல்கலைக் கழக நிர்வாகிகள் இரங்கல் செய்திகள் தெரிவித்துள்ளன

ரூத் ஜார்ஜ் படுகொலை செய்யப்பட்ட தகவல் ஐதராபாத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக சிகாகோ போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.