ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்.. அரையிறுதியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வலைது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் 10ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதலாவது அரையிறுதிப் போட்டியும், வரும் 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் இறுதிப் போட்டியில் இந்திய பாகிஸ்தான் மோதும் என்றும் இப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் இந்தியா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க இருக்கும் நிலையில் திடீரென ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காயம் பெரிய அளவில் இல்லை என்றும் ரோஹித் சில நிமிடங்கள் மட்டும் அவர் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளதாகவும் இதனால் அவர் அரையிறுதி போட்டியில் விளையாடுவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

More News

ஷில்பா ஷெட்டி கட்டியிருக்கும் இந்த புடவையின் விலை இவ்வளவா?

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன

பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் டிஜிட்டல் உரிமையில் மட்டுமே.. சிம்புவின் 'பத்து தல' பிசினஸ்!

 சிம்பு நடித்து வரும் பத்து தல'  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். 

விக்ரமனை பிராங்க் செய்த குயின்ஸி.. என்ன நடக்குது  இங்கே?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பிராங்க் காட்சிகள்

மருத்துவ சிகிச்சையில் த்ரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே.. என்ன ஆச்சு ஹீரோயின்களுக்கு?

த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய நடிகைகள் தற்போது மருத்துவ சிகிச்சையில்  இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.