close
Choose your channels

ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்.. அரையிறுதியில் விளையாடுவாரா?

Tuesday, November 8, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வலைது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் 10ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதலாவது அரையிறுதிப் போட்டியும், வரும் 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் இறுதிப் போட்டியில் இந்திய பாகிஸ்தான் மோதும் என்றும் இப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் இந்தியா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க இருக்கும் நிலையில் திடீரென ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காயம் பெரிய அளவில் இல்லை என்றும் ரோஹித் சில நிமிடங்கள் மட்டும் அவர் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளதாகவும் இதனால் அவர் அரையிறுதி போட்டியில் விளையாடுவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.